Monday, July 18, 2011

மப்புடன் எழுதியது - 2

உன் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது
ஆனால் அதை விடவும் போதையில் மிதப்பவர்களை பார்த்தால் வெறி அதிகமாகிறது
கடுப்பேத்துறானுங்க மை லார்ட்

நாம சொல்ற விஷயத்தை நாம யோசிக்காத ஒரு ஆங்கிளில் யோசிச்சு கேள்வி கேட்டு
முழி பிதுங்க வைக்க பெண்களால மட்டுமே முடியும்....
முடியலைடா சாமி..

அது ஏன் நெறைய பொண்ணுங்க பசங்களை பார்க்கும்போது மட்டும்
இல்லாத காதோரத்து முடியை இழுத்து
பின்னாடி விடுறாளுங்க..

முன்னால போற வண்டியை நாம ஓவர் டேக் எடுக்கலாம்னு ரைட் சைடுல போனா....
நமக்கு பின்னால ஒருத்தன் வேகமா ஹாரன் அடிச்சுகிட்டே வர்றான்...
என்ன எழவுடா இது..

கேர்ள் பிரெண்ட் போன் பண்ணும்போது அதை உங்க பாட்டி அட்டென்ட் பண்ணி,
அவன் கக்கூஸ்ல இருக்குறான்மா.......
வெளிய வந்ததும் பேச சொல்றேன்னு சொன்னது உண்டா..?
நான் நானாக இருக்கும்போது மட்டுமே நானாகிறேன்..
சனிக்கிழமை சாயங்காலம் வந்தாலே
இதே ரோதனையா போச்சு...
எனக்கே புரியலை நான் சொன்னது..
பசங்க வெளிஇடங்களில் பெண்கள்கையை பிடிச்சுகிட்டே அலைவதிற்கான காரணம்
ரொமாண்டிக் இல்லைங்க...
எகனாமிக்...
விட்டா ஓடிபோயி ஷாப்பிங் ஆரம்பிச்சுடுராளுங்க

கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்து முடிச்சா கரெக்ஷன் சொல்றேன்னு
கண்ட கருமாந்திரத்தை எல்லாம் சொல்லி
குழப்பி காண்டு ஆக்குறீங்களே ஏன்டா ஏன்.....
10,15 பேரு உட்காந்து இருக்குற ஏசி ரூம் மீட்டிங்ல எவனாவது ஒருத்தன்
ஷூ வை கழட்டி எழவு கொட்டுறீங்களே ஏன்டா ஏன்...

எட்டு மணி நேரம் ஓபி அடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்புற நேரத்தில 
அது என்ன ஆச்சு இது என்ன ஆச்சு னு நச்சரிச்சி
நாக்கு தள்ள வைக்குறீங்களே ஏன் சார் ஏன்..

ஒரு பிரச்சினைக்கு இப்படி பண்ணி பார்க்கலாமான்னு கேட்குறவனையே..
வெரிகுட்.. அதை நீயே  சரி பண்ணி கொண்டுவான்னு
கொன்னு எடுக்குறீங்களே ஏன் சார்..
நான் இறந்து விட்டால் என்னை உடன எரித்து விடாதீர்கள்..
என் நண்பர்கள் எப்போதும் தாமதமாக தான் வருவார்கள்.. 
பரதேசி நாயிங்க என்னைக்கு டைம்க்கு வந்து இருக்குதுங்க..
காதலிப்பது யாராக இருந்தாலும் ஷ்டப்படுவது நான் தான்.. 

mobile phone..

(
விடிய விடிய  அந்த 4 வார்த்தையை தான் பேசுதுங்க..சனியனுங்க..என்னை வேற
சார்ஜ் லையே போட்டு சூடாக்குதுங்க..)

ஆபிஸ்ல சிஸ்டம்மை சீரியஸா பார்த்துகிட்டு இருந்தா நம்மளை பார்க்க வர்றவனுங்க
நம்மகிட்ட பேசாம டக்குனு எட்டி சிஸ்டத்தை பார்க்கிறானுன்களே..
ஏன்டா ஏன்....

இது எல்லாம் சத்தியமா நான் எழுத்துல சாமி...
என் நண்பன் கணேஷ் எழுதினான்.
எனக்கு புடிச்ச சில வார்த்தைகளை நான் இங்கே போட்டிருக்கேன்.

ஆபீஸ்ல ரொம்ப ஆணி என்ன பண்ணுறதுன்னு தெரியல அதுனால ஒரு காப்பி பேஸ்ட்.
கூடிய விரைவில் உலகின் ஏழாவது பெரிய வைரம் பத்தியும், உலகில் நம்பர் ஒன் பணக்காரர் இந்திய மகாராஜா பத்தியும் வரும்.

சரி......சரி......காரி காரி துப்பிட்டு போங்க......