நேத்து ஈவெனிங் ஏழு மணிக்கு Race Courseல வாக்கிங் போய்விட்டு வீடுக்கு வந்து ஒரு குளியல். உடம்பும் மனமும் பிரெஷ். வழக்கம் போல ரெண்டு large விஸ்கி உள்ளே போனதும், என் நினைவுகள் பின்நோக்கி போனது...
என் ரூம்ல எனக்கு பிடித்த பாடல்கள் போட்டு, மப்பு ஏற ஏற, மெதுவாக கடந்த கால மன வலிகள் வெளிய வந்து, வலி தங்காமல் அதுக்கு மருந்தாக இன்னும் ரெண்டு large விஸ்கி உள்ளே போனதும் வலியும் மெதுவாக குறைந்தது. பத்து வருடம் ஆனபின்னும் இன்னும் காயம் ஆறவில்லை. அது தான் ஏன் எப்படினு தெரியவில்லை....
தீனா படம், யுவன் சங்கர் ராஜா மியூசிக், ஹரிஹரன் வாய்ஸ்ல மனதை மெதுவாக பழைய நினைவுகளை நெருடிவிடும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொள்ள கொள்ள
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்......
காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன் அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே......
பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார் ?
ஆழம் அளந்தவன் யார் ?
கரையை கடந்தவன் யார் ?
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே......
இது மட்டும் இல்லைங்க ....
நமக்கு மப்பு ஏற ஏற தான் பழைய நினைப்புகள் மெதுவா வெளிய வரும் ஆன நம்ப வெறும்பய எழுத்துல பழைய நினப்ப அணு குண்டு வெடிச்ச மாதிரி, ஆறாத காயத்துல பச்சை குத்தர மாதிரி எழுதுவாரு. அப்படி அவரு எழுதுன அந்த பதிவ நான் படிச்சுட்டு நைட் புல்லா மப்பு போட்டுட்டு டெரர்ர தூங்க விடாம பொலம்பி பொலம்பி வாந்தி எடுத்தேன். அன்னைக்கு வெறும்பய போன் நம்பர் கிடைக்கல அதுனால அவன் தப்பிச்சான். டெரர் மாட்டிகிட்டான்.
இது தாங்க அந்த பதிவு - என் செல்லச் சிறுக்கி...
இந்த என் செல்லச் சிறுக்கி பதிவ படிச்சுட்டு யார் யார்கெல்லாம் என்ன ஆகா போகுதோ ???? கண்டிப்பாக நரி ஒரு வாரத்துக்கு மட்டையா கிடப்பான். ஆன போலீசுக்கு.....????