Wednesday, August 10, 2011

உலகின் ஏழாவது பெரிய வைரம் - பாகம் ஒன்னு


சௌமஹால்லா அரண்மனை - ஹைதராபாத்.
ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மானின் தந்தை மெஹ்பூப் அலிகான் வாழ்ந்து அனுபவித்த இடம்.

ஒஸ்மான் சௌமஹால்லா அரண்மனைல உலாத்திக் கொண்டிருந்தார். ஒரு அறைல ஓரமாக ஒரு ஜோடி செருப்புகள் கிடந்தன. எந்த பொருளும் வீணாக போகிறது என்றால் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மானுக்கு தாங்க முடியாது. (ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் ஒரு மகா கஞ்ச மகாராஜா) அருகில் சென்று பார்த்தார். அவை தம் தந்தையின் செருப்புகள் என்று தெரியவந்தது. தந்தையின் செருப்பு தம் கால்களுக்குப் பொருந்திப் போனால் அணித்து கொள்ளலாம் என்று அவற்றை அணிய முற்பட்டார். ஒரு செருப்பில் ஏதோ தட்டுப்பட்டது. அந்த செருப்பை கைல எடுத்து தட்டுப்பட்ட பொருளை வெளியே எடுத்துப்பார்த்தார். அது மினுமினுத்தது. " இது ஜோலிகறதே, ஒரு வேளை வைரமாக இருக்குமோ, அப்படி இருந்தால் என் தந்தை அதை செருப்பில் பதுக்கி வைத்து என்ன பண்ணபோகிறார், இது வைரமாக இருக்க வாய்ப்பு இல்லை " என்று ஒரு தீர்மானத்துக்கு வந்தார் ஒஸ்மான், அதை தன் பைஜாமாவின் பைக்குள் போட்டுவிட்டு நடையைக்கட்டினார்.

அந்த பொருள் உண்மையில் வைரம் தான். அது உலகின் ஏழாவது பெரிய வைரம். அதன் பெயர் ஜேக்கப் வைரம். எடை 184.5 கராட், அதாவது 36.9 கிராம்.



ஜேக்கப் வைரம் பற்றி ஒரு சின்ன குறிப்பு.......

ஆப்பிரிக்காவின் ஒரு சுரங்கத்தில் கண்டடுகப்பட்டது இந்த வைரம். அழகான வைரத்துகே உரிய வடிவத்தில் வெட்டுவதுக்கு முன் 400 காரட் இருந்தது. பின் அது ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

1891 ஆம் ஆண்டு ஒரு கோடைக்காலம். நாக்கு வெளியே தள்ள ரெண்டு குதிரைகள்,  சௌமஹால்லா அரண்மனை வாசலில் வந்து நின்றன. அந்த வண்டியில் இருந்து இறங்கினார் அலெக்ஸ்சண்டேர் மால்கன் ஜேக்கப். துருக்கியர், நாப்பது தாண்டிய வயது, ஆள் கொஞ்சம் குள்ளம், கருமையான தலை முடி, எடுப்பான உடை, மிடுக்காக நடக்க ஆரம்பித்தார். அரண்மனைக்கு அடிக்கடி வந்து செல்பவர் என்பதால் காவலர்கள் யாரும் தடுக்கவில்லை. ஒரு கடல் பயணத்தின் போது, கப்பல் உடைந்துவிட, பம்பாயில் கரை ஒதுங்கியவர் ஜேக்கப். கைல காசு இல்லாமல் பம்பாய் நகரில் சுற்றி திரிந்து பின் ஹைதராபாத் சென்று பிழைப்பு நடத்த ஆரம்பித்தார். ஒரு நகை வியாபாரிடம் வேலை கிடைத்தது. சில வருடங்களில் ராம்பூர் சமஸ்தான நிஜாமுக்கு நகைகள் விற்கும் ஏஜென்ட்டாக செயல்பட்டார். பிறகு தோல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கும் பணியாற்றினார். வாழ்க்கை வசதி மிகுந்ததாக மாறியது.

ஹைதராபாத் நிஜாம் மெஹ்பூப் அலிகானின் நட்பு கிடைத்தது. அவருக்கு நகைகள் வாங்கி கொடுக்கும் ஏஜென்ட்டாக பண்ணியற்ற ஆரம்பித்தார். அன்றைய தினத்திலும் அந்த வேலையாகத்தான் வந்திருந்தார்.
மெஹ்பூப் அலிகான் ஜேக்கப்பை வரவேற்று நலம் விசாரித்தார். ஜேக்கப் தான் கோர்ட் பையில் கைவிட்டு அந்த வைர கல்லை வெளிய எடுத்தார். மெஹ்பூப் அலிகான் தன் கையில் வாங்கி பார்த்தார் அவரது கருவிழிகளில் வைரம் ஜொலித்தது.

ஜேக்கப் நிஜாம்மிடம், இது மாதிரி கல் தான். உண்மையான வைரம் பிரிட்டனில் உள்ளது விலை 46 லட்சம் தாங்கள் சரி என்று சொல்லிவிட்டால், தொகையில் பாதியை நீங்கள் கட்டி விட்டால் வைர கல்லை வர வழைத்து விடலாம். அதற்கு நிஜாம், சரி வாங்கி விடலாம் முதலில் அசல் வாங்கி வாரும், அதை நான் பார்த்து விட்டு திருப்தியாக இருந்தால் பணம் கொடுக்கிறேன் என்றார்.

ஜேக்கப் அங்கிருந்து வியாபாரம் வெற்றியுடன் முடிந்து விட்ட திருப்தியுடன் கிளம்பினர்.
(நன்றி : திரு.முகில் - அகம்,புரம்,அந்தபுரம்)

அப்புறம் தான் ஜேக்கப்க்கு நம்ப ஹைதராபாத் நிஜாம் மெஹ்பூப் அலிகான் அடில ஆப்பு வெச்சு அடிச்சாரு...... அந்த ஆப்பு மேட்டர் அடுத்த பாகம்.

Monday, July 18, 2011

மப்புடன் எழுதியது - 2

உன் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது
ஆனால் அதை விடவும் போதையில் மிதப்பவர்களை பார்த்தால் வெறி அதிகமாகிறது
கடுப்பேத்துறானுங்க மை லார்ட்

நாம சொல்ற விஷயத்தை நாம யோசிக்காத ஒரு ஆங்கிளில் யோசிச்சு கேள்வி கேட்டு
முழி பிதுங்க வைக்க பெண்களால மட்டுமே முடியும்....
முடியலைடா சாமி..

அது ஏன் நெறைய பொண்ணுங்க பசங்களை பார்க்கும்போது மட்டும்
இல்லாத காதோரத்து முடியை இழுத்து
பின்னாடி விடுறாளுங்க..

முன்னால போற வண்டியை நாம ஓவர் டேக் எடுக்கலாம்னு ரைட் சைடுல போனா....
நமக்கு பின்னால ஒருத்தன் வேகமா ஹாரன் அடிச்சுகிட்டே வர்றான்...
என்ன எழவுடா இது..

கேர்ள் பிரெண்ட் போன் பண்ணும்போது அதை உங்க பாட்டி அட்டென்ட் பண்ணி,
அவன் கக்கூஸ்ல இருக்குறான்மா.......
வெளிய வந்ததும் பேச சொல்றேன்னு சொன்னது உண்டா..?
நான் நானாக இருக்கும்போது மட்டுமே நானாகிறேன்..
சனிக்கிழமை சாயங்காலம் வந்தாலே
இதே ரோதனையா போச்சு...
எனக்கே புரியலை நான் சொன்னது..
பசங்க வெளிஇடங்களில் பெண்கள்கையை பிடிச்சுகிட்டே அலைவதிற்கான காரணம்
ரொமாண்டிக் இல்லைங்க...
எகனாமிக்...
விட்டா ஓடிபோயி ஷாப்பிங் ஆரம்பிச்சுடுராளுங்க

கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்து முடிச்சா கரெக்ஷன் சொல்றேன்னு
கண்ட கருமாந்திரத்தை எல்லாம் சொல்லி
குழப்பி காண்டு ஆக்குறீங்களே ஏன்டா ஏன்.....
10,15 பேரு உட்காந்து இருக்குற ஏசி ரூம் மீட்டிங்ல எவனாவது ஒருத்தன்
ஷூ வை கழட்டி எழவு கொட்டுறீங்களே ஏன்டா ஏன்...

எட்டு மணி நேரம் ஓபி அடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்புற நேரத்தில 
அது என்ன ஆச்சு இது என்ன ஆச்சு னு நச்சரிச்சி
நாக்கு தள்ள வைக்குறீங்களே ஏன் சார் ஏன்..

ஒரு பிரச்சினைக்கு இப்படி பண்ணி பார்க்கலாமான்னு கேட்குறவனையே..
வெரிகுட்.. அதை நீயே  சரி பண்ணி கொண்டுவான்னு
கொன்னு எடுக்குறீங்களே ஏன் சார்..
நான் இறந்து விட்டால் என்னை உடன எரித்து விடாதீர்கள்..
என் நண்பர்கள் எப்போதும் தாமதமாக தான் வருவார்கள்.. 
பரதேசி நாயிங்க என்னைக்கு டைம்க்கு வந்து இருக்குதுங்க..
காதலிப்பது யாராக இருந்தாலும் ஷ்டப்படுவது நான் தான்.. 

mobile phone..

(
விடிய விடிய  அந்த 4 வார்த்தையை தான் பேசுதுங்க..சனியனுங்க..என்னை வேற
சார்ஜ் லையே போட்டு சூடாக்குதுங்க..)

ஆபிஸ்ல சிஸ்டம்மை சீரியஸா பார்த்துகிட்டு இருந்தா நம்மளை பார்க்க வர்றவனுங்க
நம்மகிட்ட பேசாம டக்குனு எட்டி சிஸ்டத்தை பார்க்கிறானுன்களே..
ஏன்டா ஏன்....

இது எல்லாம் சத்தியமா நான் எழுத்துல சாமி...
என் நண்பன் கணேஷ் எழுதினான்.
எனக்கு புடிச்ச சில வார்த்தைகளை நான் இங்கே போட்டிருக்கேன்.

ஆபீஸ்ல ரொம்ப ஆணி என்ன பண்ணுறதுன்னு தெரியல அதுனால ஒரு காப்பி பேஸ்ட்.
கூடிய விரைவில் உலகின் ஏழாவது பெரிய வைரம் பத்தியும், உலகில் நம்பர் ஒன் பணக்காரர் இந்திய மகாராஜா பத்தியும் வரும்.

சரி......சரி......காரி காரி துப்பிட்டு போங்க......

Monday, May 30, 2011

மப்புடன் எழுதியது - 1

 

நேத்து ஈவெனிங் ஏழு மணிக்கு Race Courseல வாக்கிங் போய்விட்டு வீடுக்கு வந்து ஒரு குளியல். உடம்பும் மனமும் பிரெஷ். வழக்கம் போல ரெண்டு large விஸ்கி உள்ளே போனதும், என் நினைவுகள் பின்நோக்கி போனது...

என் ரூம்ல எனக்கு பிடித்த பாடல்கள் போட்டு, மப்பு ஏற ஏற, மெதுவாக கடந்த கால மன வலிகள் வெளிய வந்து, வலி தங்காமல் அதுக்கு மருந்தாக இன்னும் ரெண்டு large விஸ்கி உள்ளே போனதும் வலியும் மெதுவாக குறைந்தது. பத்து வருடம் ஆனபின்னும் இன்னும் காயம் ஆறவில்லை. அது தான் ஏன் எப்படினு  தெரியவில்லை....

தீனா படம், யுவன் சங்கர் ராஜா மியூசிக், ஹரிஹரன் வாய்ஸ்ல மனதை மெதுவாக பழைய நினைவுகளை நெருடிவிடும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொள்ள கொள்ள
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்......

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன் அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் 
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே......

பெண்களின் உள்ளம் படு குழி என்பேன் 
விழுந்து எழுந்தவன் யார் ?
ஆழம் அளந்தவன் யார் ?
கரையை கடந்தவன் யார் ?
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால் 
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே......

இது மட்டும் இல்லைங்க ....

நமக்கு மப்பு ஏற ஏற தான் பழைய நினைப்புகள் மெதுவா வெளிய வரும் ஆன நம்ப வெறும்பய எழுத்துல பழைய நினப்ப அணு குண்டு வெடிச்ச மாதிரி, ஆறாத காயத்துல பச்சை குத்தர மாதிரி எழுதுவாரு. அப்படி அவரு எழுதுன அந்த பதிவ நான் படிச்சுட்டு நைட் புல்லா மப்பு போட்டுட்டு டெரர்ர தூங்க விடாம பொலம்பி பொலம்பி வாந்தி எடுத்தேன். அன்னைக்கு வெறும்பய போன் நம்பர் கிடைக்கல அதுனால அவன் தப்பிச்சான். டெரர் மாட்டிகிட்டான்.

இது தாங்க அந்த பதிவு  - என் செல்லச் சிறுக்கி... 

இந்த என் செல்லச் சிறுக்கி பதிவ படிச்சுட்டு யார் யார்கெல்லாம் என்ன ஆகா போகுதோ ???? கண்டிப்பாக நரி ஒரு வாரத்துக்கு மட்டையா கிடப்பான். ஆன போலீசுக்கு.....????

Monday, May 16, 2011

இந்திய மகாராஜகளும் அவர்களின் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் - பாகம் மூணு

பாகம் ஒன்னு - இங்க படிக்கலாம்....
பாகம் ரெண்டு  - இங்க படிக்கலாம்....



பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், அதி ஆடம்பரமானவை. தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு காருக்கும்மென்றே தனித்தனியாக ஏராளமான நகைகள் இருந்தன. அந்தக் கார்கள் சர்வீஸ்க்கு விடும் போது, அதை சுற்றி ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள். அவரது ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் நம்பர் 0 (பூஜ்யம்).

விஸியநகரம் (Vizianagaram) என்ற சிறிய சமஸ்தானத்தின் மகாராஜா, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மத்தியில் பிரம்மாண்டமான ஊர்வலம் வருவார். நூறு கார்கள் அதில் கலந்து கொள்ளும். ஆனால் அவர் தான் காதல் வாகனமான, முற்றிலும் வெள்ளி முலாம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் கம்பீரமான பவனி வருவார். அப்போது நூற்றுக்கணக்கான யானைகள் மலர் தூவி வரவேற்கும்.
 

பஹவல்பூர்  சமஸ்தான நவாபுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் "நவாப் வருகிறார்" என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையில் இருக்கும் மக்கள் எல்லோரும் முதுகை காட்டியப்படி திரும்பி விடுவார்கள். நவாப் கடந்து சென்ற பிறகு தங்கள் வேலைகளை தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

 சைக்கிளின் கேரியரில் பிராய்லர் கோழிகளை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு செல்வர்களே, அது போல தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் கோழி, ஆடு, மான்களைஎல்லாம் இறைச்சிக்காக கொண்டு செல்லும் பழக்கம் பம்பாயை சேர்ந்த அப்துல் அலி என்ற பெரும் பணக்காரருக்கு இருந்தது.

இப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் கௌரவத்தின் சின்னமாக கருதப்பட்டாலும் அதனை வைத்துக் கொண்டு நம் மகாராஜாக்கள் செய்த அட்டுலுலியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. 1907 ஆம் ஆண்டிலிருந்து 1947 ஆம் ஆண்டுவரை பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை சுமார் 40,000. அதில் இந்தியாவில் விற்கப்பட்டவை சுமார் 1,000 கார்கள்.
 

மைசூர் மகாராஜா வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை 35. பாட்டியாலா மகாராஜாவிடம் இருந்த கார்களின் எண்ணிக்கை 38. அப்போது முதலிடம் நமது ஹைதராபாத் நிஜாம் ஓஸ்மான் அலிகான் தான். அவரிடம் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50. ஹைதராபாத்துக்குள் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் வாசம் வீசியது 1912 ஆம் ஆண்டு. ஒஸ்மானின் தந்தை நிஜாம் மெஹபூர் அலிகான் 1911 ஆம் ஆண்டு ஒரு கார் ஆடர் செய்தார்.

"மஞ்சள் நிறத்தில் காரின் உடல் இருக்கட்டும். உள்ளே நான் உட்காருவதுக்கு இருக்கை சிம்மாசனம் போல அமைக்கப்பட்டிருக்க வேண்டும். காரின் முன் புறம் சமஸ்தானத்தின் சின்னம் இருக்கவேண்டும்." மெஹபூவின் விருப்பபடி கார் பயணத்திற்கு தயாராகி வந்தது. ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கைப் பயணம் முடிந்திருந்தது. அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் ஒஸ்மானிடம் வந்து சேர்ந்தது.

கௌரவமாக அதனை வைத்துக்கொண்டார் ஒஸ்மான். எந்த விதக் கஷ்டமும் அதற்கு கொடுக்கவில்லை. அது பாட்டுக்கு அரண்மனையில் கார் ஷெட்டில் சிலை போல் நின்றது. எடுத்து ஓட்டினால் டயர் தேய்ந்து விடுமே. 1912 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஸ்பீடோமீட்டர் காட்டிய மைல்கள் வெறும் 347 தான்.

அதற்குப் பின்பும் ஒஸ்மான் ஒரு சில ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கினர். ஆனால் உபயோகிக்கவில்லை. பிற வகை கார்களையும் பல்வேறு மாடல்களில் நூற்றுக்கணக்கில் சேர்த்து வைத்திருந்தார். ஆனால் அவர் தான் பயணங்களுக்கு உபயோகித்து ஒரு பாடாவதி போர்டு கார் தான்.
(நன்றி : திரு. முகில் - அகம், புறம், அந்தப்புரம்)

இப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் டயரை இந்தியாவில் பதித்த வரலாறு இது. 1907 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை அதன் மொத்த தயாரிப்பில் 25% இந்தியாவில் விற்பனை ஆனது. இப்போது ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இந்தியாவில்,
Rolls-Royce Ghost 6.5 Petrol MT – Rs. 2,50,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom EWB 6.8 Petrol – Rs. 3,50,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom Sedan 6.8 Petrol AT – Rs. 3,50,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom Coupe 6.8 L Petrol AT – Rs. 4,00,00,000 (Ex -Showroom Price)
Rolls-Royce Phantom Drophead  Convertible Coupe 6.8 L Petrol AT – Rs. 4,20,00,000 (Ex -Showroom Price)
(ref. http://www.xprice.in/rolls-royce-cars-price-features-specifications-1617)

சரி சரி...... டென்ஷன் ஆகாதிங்க.....
நம்ப மகாராஜாக்கள் மக்கள் கட்டுற வரி பணத்துல தான் இந்த ஆட்டம். இதே அவங்க உழைத்து சம்பாரிச்சு அவங்க காசுல வாங்கிருந்த இந்த ஆட்டம் காணாம போயிருக்கும். என்ன பண்ணுறது தலை எப்படி இருக்குமோ வால் அப்படி தான் இருக்கும். என்னங்க புரியலையா அந்த காலத்துல மகாராஜாக்கள் ஆடுன ஆட்டம் இப்போ நம்ப அரசியல்வாதிகள் அப்படியே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாம கடைபுடுச்சுட்டு இருகாங்க.  

அடுத்தது, ரெண்டு தலைப்புல தகவல்கள் திரட்டிட்டு இருக்கேன். அதுல ஒன்னு, உலகின் நம்பர் ஒன் பணக்கார மகாராஜா. ரெண்டாவது, மகாராஜாகளின் தினசரி வாழ்கை எப்படிப்பட்டது அதில் அந்தப்புரம் உள்பட கூடிய விரைவில்....

Saturday, May 14, 2011

இந்திய மகாராஜகளும் அவர்களின் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் - பாகம் ரெண்டு

பாகம் ஒன்னு - இங்க படிக்கலாம்....

அது என்ன கார், எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். "அதென்ன அவரால மட்டும் தான் வாங்க முடியுமா என்ன? நாங்களும் வாங்குவோம்ல" என்று தேடித் தேடி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் சமஸ்தானத்தின் மகாராஜாவாகப்பட்டவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர, பணக்கரார்களும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

அதனால் மகாராஜாக்களைத் தவிரவும் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. என்ன செய்யலாம் என்று யோசித்த மகாராஜாக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை, தங்கள் விருப்பப்படி வடிவமைக்கச் சொல்லி ஆடர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

விருப்பபடி என்றால்? பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டன. அலுமினியமா சேச்சே, எனக்கு வெள்ளியால் செஞ்ச கார் வேணும். அந்த மகாராஜா வெள்ளிக்கார் வச்சுருகனா, அப்படினா எனக்கு தங்க முலாம் பூசிய கார் வேணும். இப்படி டிசைன் டிசைனாக யோசித்து படு ஆடம்பரமாக, கம்பீரமாக, தங்கள் விருப்பப்படி, வசதிப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து, பிலிம் காட்டினார்கள்.

ஒருமுறை லண்டனில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்து பார்த்த ஊழியருக்கு கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலது கால் செருப்பு. கூடவே ஒரு கடிதம்.

" இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்? "  - அனுப்பியிருந்தவர் ஜாம் நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

பரோடா சமஸ்தானத்தின் மகாராணி சிம்னா பாயின் விருப்பம் வேறு மாதிரியானது. "காரில் நான் வசதியாக உட்காரவோ, படுக்கவோ ஒரு கேபின் வேண்டும். குஷன் எல்லாம் மொத் மொத்தென்று இருக்க வேண்டும். ஓட்டுனர் இருக்கையும் அந்த கேபினும் கண்ணாடியால் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்".

அல்வார் சமஸ்தானத்தின் மகாராஜா ஜெய்சிங் ஒருமுறை லண்டனில் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்கு சென்றார். புதிதாக கார் வாங்குவதுதான் அவரது எண்ணம். ஆனால் அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி அவரை சரியாக கவனிக்கவில்லை. அவர் மகாராஜா என்று விற்பனைப் பிரதிநிதிக்கு தெரியாது. "இந்த ஆளெல்லாம் எங்க கார் வாங்கப் போறான்" என்ற எண்ணம். ஜெய் சிங் கின் கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் சொன்னான்.

ஜெய்சிங் கடும் கோபக்காரர், விற்பனைப் பிரதிநிதி கூனிக் குறுகி மரியாதை கொடுக்கும்படியாக அந்த இடத்தில் ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு ஆடர் கொடுத்தார். அவரது சமஸ்தானத்துக்கு ஆறு கார்களும் அனுப்பப்பட்டன. அவற்றை உபயோகப்படுத்த ஜெய்சிங்கின் ஈகோ ஒப்புக் கொள்ளவில்லை. விலை உயர்ந்த அந்த ஆறு கார்களும் சமஸ்தானத்தில் குப்பை அள்ளும் வண்டிகளாக பயன்படுத்த சொல்லி கட்டளையிட்டார். அவை நாறின.

நந்தகான் சமஸ்தான மகாராஜா சர்வேஸ்வர தாஸ் புலி வேட்டைப் பிரியர். அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அடர்ந்த காடுக்குள் பதுங்கி இருக்கும் புலிகளை தேடுவதுக்கு ஏற்ற சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காரின் வெளியே பாதுகாவலர்கள் தொற்றிக் கொண்டு செல்வதுக்கென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இன்னொரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் மேல் கூரை வைக்கோலால் வேயப்பட்டிருந்தது.
(நன்றி : திரு. முகில் - அகம், புறம், அந்தப்புரம்)

பாத்திங்களா...
அந்த காலத்துல மகாராஜாக்கள் என்ன மாதிரி ஆடிருகாங்க, இன்னும் சில ஆட்டங்கள் கூடிய விரைவில்....

Tuesday, May 10, 2011

இந்திய மகாராஜகளும் அவர்களின் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் - பாகம் ஒன்னு




ரோல்ஸ் ராய்ஸ் காரின் வரலாறு, அது இந்தியாவுக்குள் டயர் பதித்த கதைகளையும் அதனை நம் மகாராஜாக்கள் எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்ற விவரத்தை இங்க பாக்கலாம்.

ஹென்றி ராய்ஸ் (Frederick Henry Royce) என்ற பிரிடீஷ்காரர், ஏழ்மையான குடும்பத்தில் ஐந்தாவது வாரிசாக பிறந்தார். அவருக்கு கணிதம், மெக்கானிகல் துறைகளில் நிறையவே ஆர்வம், ஆனால் குடும்ப சூழ்நிலையில் படிக்கவில்லை. பல்வேறு வேலைகள் பார்த்தார். எல்லாம் இயந்திரம் சம்பத்தப்பட்ட வேலை தான். தன் 21 வது வயதில் சொந்தமாக ஒரு சிறு நிறுவனத்தை தொடங்கினர். மோட்டார் வாகனத்துக்கான சிறு சிறு பாகங்களை தயாரித்து கொடுக்கும் நிறுவனம் அது. அவர் பிழைப்பு ஓடியது.

ராய்ஸ்க்கு 40 வயது ஆன போது, சொந்தமாக கார் ஒன்றை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அது Decauville என்ற பழைய கார். அதை ஓட்டி பார்த்த ராய்ஸ்க்கு கோபம் தான் வந்தது. அதிக சத்தம், மிக மெதுவான இயக்கம், ஸ்டார்ட் செய்வது ரொம்பவே கஷ்டப்படவேண்டும் என்று ஏகப்பட்ட குறைகள்.

தானே ஒரு காரை தயாரித்துப்பாக்கலாம் என்று முடிவு செய்த ராய்ஸ், படபடவென களத்தில் குதித்தார். ஒரே வருடத்தில் ஒரு புதிய கார் தயாரானது. 1904 ஆம் வருடம் ஏப்ரல் 1 அன்று அதை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தார். அது ஓட்டுவதுக்கு சத்தமின்றி, சிரமமின்றி இருந்தது.

ராய்ஸ்ன்  புதிய வெற்றிகரமான கார் பற்றி சார்லஸ் ஸ்டீவர்ட் ரோல்ஸ் (Charles Stewart Rolls) என்பவர் அறிந்தார். ரோல்ஸ் நிறைய படித்தவர், கார் வியாபாரி, நல்ல வசதி படைத்தவர். ரோல்ஸ், ராய்ஸ் உடன் இணைந்து புதிய ரகக் கார்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்துக் கொண்டார்கள். அவர்கள் தயாரிக்கும் காருக்கு ரோல்ஸ் ராய்ஸ் (RR) என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள். வேலைகள் தொடங்கப்பட்டன.

1905 இல் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார், ஒரு பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடியது. பின்னர் படிப்படியாக இங்கிலாந்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பரவ ஆரம்பித்தது. விக்கப்பட்ட முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 395 பவுண்ட். கோஸ்ட், டான், பாண்டம் என்று பல்வேறு மாடல்களில் வந்து கலக்க ஆரம்பித்தன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இருந்த நாடுகளில் எல்லாம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் நுழைய ஆரம்பித்தன.

1908 ஆம் ஆண்டு பம்பாய்க்கும் கோலாபுருகும் இடைய ஒரு கார் பந்தயம் நடைபெற்றது. அந்த பந்தயத்தை காண குவாலியர் மகாராஜா இரண்டாம் மாதவ்ராவ் சிந்தியா வந்திருந்தார். அது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நடைபெற்ற பந்தயம். சாலைகள், சரியான பாதைகள் கூட இல்லாத இடங்களையும் சேர்த்து மொத்தம் 120 மைல்களை கடக்கவேண்டும். அதில் ஆறு மலைகளை சுற்றி வர வேண்டும் என்பது அடக்கம். பந்தயத்தில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் சுலபமாக ஜெய்த்தது.

Pearl of India என்று பெயரிடப்பட்ட அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் அழகும் கம்பீரமும் வேகமும் சிந்தியாவை அசத்தியது. RR என்று சுருக்கமாகவும் கீழே Rolls Royce என்று முழுமையாகவும் பொறிக்கப்பட்ட முத்திரை. முகப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறகு விரித்துப் பறக்கும் தேவதை. பளபளவென்று க்ரீம் நிற உடல். உடனே பணம் கொடுத்து அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை தனதாக்கிக் கொண்டார் சிந்தியா. பெருமை பொங்க அதனை தன் சமஸ்தானமெங்கும் ஓட்டி பவுசு காட்டினார். பிற சமஸ்தான மகாராஜக்களுக்கும் இந்த செய்தி பரவியது.
(நன்றி : திரு. முகில் - அகம், புறம், அந்தப்புரம்)

இது சும்மா ஒரு முன்னுரை தான். இதுக்கு அப்புறம் தான் இருக்குது ரோல்ஸ் ராய்ஸ் கார் நம்ப மகாராஜாக்கள் கிட்ட சிக்கிட்டு அது பட்ட பாடு. அதுக்கு நம்ப மாதிரி உயிர் இருந்துச்சுனா எல்லா காரும் தூக்கு போட்டு தொங்கிருகும்.

பாகம் ரெண்டு கூடிய விரைவில்.....................

Wednesday, April 27, 2011

மாலுமி ஓர் அறிமுகம்

வணக்கம் மச்சிகளா,

என் பெயர் மாலுமி, இந்த பெயர் வர காரணம் நான் ஒரு ப்ரபஷ்னல் குடிகாரன். எபோதுமே தண்ணில இருப்பேன் (அதிகம் இல்லை ஜெண்டில் மேன் தினம் இரண்டு பெக் தான்), அதுனால...... (டேய்... டேய்... நிறுத்து.... இப்போ நீ என்ன சொல்ல வர....)

மச்சி ஒரு குவட்டேர் ஒன்னு சொல்லு......... (அட..... தூ தூ தூ தூ......பன்னாட பரதேசி நாயே.....)

மச்சி துப்பறதா இருந்தா மூஞ்சில துப்பு தலைல துப்பாத, ஏன்னா மூஞ்சில துப்புனா தொடசுகலம் தலைல துப்புனா குளிகோணும் அதுனால தான். (டேய்........$#@%#^%$^%&.........சரி மேல சொல்லு....)

இந்த பதிவுலகில் உள்ளே வர காரணம் நமது பதிவுலக டான் மதிப்பிற்குரிய பட்டாபட்டி அவர்கள் தான்.

பட்டா னா.... வணக்கமுங்க.......

அவரின் ஹோர்லிக்ஸ் பாட்டேல் பதிவை படுச்சுட்டு, நான் ஆபிசில் தனியாக விழுந்து விழுந்து சிரிக்க அதை எல்லோரும் ஒரு மாதிரியாக பார்க்க அதை நான் சமாளிக்க பட்ட பாடு எனக்கு தான் தெரியும். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். அதன் பிறகு தான் பதிவுகளை படித்து என் ஆபீஸ் டென்ஷன் கம்மிய இருக்குது. 
(அப்படியா... சரி அப்புறம் என்ன ?????)

அப்புறம் என்ன............ குரு வணக்கம் தான்

என் குரு வணக்கம் - டெரர் கும்மிக்கு

(அவர்கள தான் நான் என்னோட முதல் பதிவு போட முடிச்சது, எனக்கு தமிழ்ல எப்படி டைப் பண்ணுறதுனு கைய புடுச்சு கத்து கொடுத்தது, ட்ரவுசர் கழுட்டி அடிச்சது முதல் $%#  &*@ வரை எல்லாமே டெரர் கும்மி குரூப்ல இருக்குற அந்த 32 பேர் தான், அதுல முக்கியமா டெரர், பன்னிகுட்டி, போலீசு, பாபு, மாணவன், வைகை, வெறும்பய, நரி, மங்குனி, எஸ்.கே., சௌந்தர், அருண், செல்வா, MLA, கார்த்திக்  போன்ற பல நாதாரிகளும் வெங்கட், பெ.சொ.வி. மாதவன் போன்ற பல நல்லவர்களும்)

இது டெரர் கும்மி நாதாரிக்களுக்காக.........

கவுரமான வேலை, நிரந்தர வருமானம் தவிர படை எடுப்பின்போது அடிக்கப்படும் கொள்ளையில் பங்கு போன்றவை தான் ஆரம்ப காலத்தில் இந்திய மக்களை ராணுவத்துக்கு ஈர்த்தது. பின்னாளில் சட்ட திட்டம், வரைமுறை என்று ராணுவம் பல கட்டுப்பாடுகள் கொண்டதாக வகுக்கப்பட்டது. கிழக்கு இந்திய நிறுவனத்தின் சிப்பாயாக இருப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியும் பெருமைகுரியதகவும் மாறிப்போனது. இதனால் அடுத்தத்அடுத்த தலைமுறை தலைமுறையாக தாத்தா, அப்பா, மகன் என்று நிறுவனத்தில் சிப்பாயாக இடம் பெற்றார்கள் அதற்காக போட்டியும் போட்டார்கள்.

அப்போதைய வெள்ளைகரர்களும் தங்களின் கீழ் பணியாற்றிய சிப்பாய்களுடன் நெருக்கமாக அன்புக்காட்டி பழகினார்கள். இதனால் புல்லரித்துப்போன சிப்பாய்களின் கடமையுணர்வும் விசுவாசமும் எல்லையில்லாமல் போனது.

சாதரணமாகவே இந்திய மக்கள் நன்றியும் எஜமான் விசுவாசமும் கொண்டவர்கள். அதிகாரிகள் அளவுக்கு மீறி அன்பு காட்டினால் கேட்கவும் வேண்டுமா?. ஆற்காட்டின்  போரின் போது, ஒரு முறை ராஜா சாகிப்பின் முற்றுகையில் கிளைவ் படையில் உள்ளவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது சுதேசி சிப்பாய்கள் கிளைவ்விடம்  வந்து, "கேப்டன், உணவுப்பொருள் குறைகிறதே எப்படி சமாளிப்பது என கவலைப்படாதிர்கள். நாங்கள் வெறும் கஞ்சி குடித்தே பசி தீர்த்துக்கொள்வோம். நல்ல சாப்பாடை நீங்களும் உங்கள் பிரிட்டஷ் சிப்பாய்களும் சாப்பிடுங்கள்", என்று கூறினார்களாம்.

18 ஆம் நூற்றண்டு வரையில் இருந்த இதை நெருக்கமான உறவு 19 ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில் அதிகாரிகளின் மனைவிமார்களும் வந்து இந்தியாவில் குடியேற தொடங்கியதுமே காணாமல் போனது. இந்திய கறுப்பர்களுடன் தங்களின் கணவன்மார்கள் நெருங்கிப் பழகுவதை இங்கிலீஷ் பெண்கள் விரும்பவில்லை.

சீதாரம் பாண்டே என்கிற சிப்பாய் எழுதிய "நினைவு குறிப்புகளில்" ஒரு குறிப்பு இப்படி சொல்கிறது,
"முன்பெல்லாம் ஆபீசர்கள் சிப்பாய்களுடன் சேர்ந்து நாட்டிய நிகழ்சிகளில் பங்கு கொள்வார்கள். ஒன்றாக உட்கார்த்து உணவு அருந்துவார்கள், வேட்டைக்கு செல்வார்கள், விளையாடுவார்கள். இப்போது அருகிலேயே வருவது இல்லை. எல்லாம் அவர்களின் மனைவிமார்கள் போதனை"

( நன்றி! திரு. உமா சம்பத் - 1857 சிப்பாய் புரட்சி (பக்கம் 56 - 57)

மச்சிகளா, எனக்கு ஒரு சந்தேகம்..... (என்னடா உனக்கு சந்தேகம் நாயே................)

இல்ல... சிப்பாய் புரட்சி ஏற்பட யார் காரணம் ??? வெள்ளைகாரன் மனைவி... (டேய்.......%$#^$@!#$$%#$*&^%$)

சரி சரி...... நோ கோவம் ப்ளீஸ் ........ எல்லோரும் வந்து என்னை காரி துப்பி ஆசீர்வாதம் பண்ணுக......